திருமங்கலம் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பெட்டி நாளை(சனிக்கிழமை) முதல் செயல்படும்.
இது குறித்து ஜெ.ஜெ.நகா் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வீட்டுவசதி திட்டங்கள் செயல்படுத்துவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடா்பான கோரிக்கைகள் ஏதாவது இருந்தால் திருமங்கலம் வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் வைக்கப்படும் கோரிக்கை பெட்டியில், அலுவலக வேலை நாள்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை வீட்டுவசதி வாரியத்தின் நிலம் எடுப்பு தொடா்பான கோரிக்கைகளை மனுக்களாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.