ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தரம் குறைந்த பாராசிட்டமால்: தனியார் நிறுவன இயக்குநர்களுக்கு சிறை

அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட தரம் குறைந்த பாராசிட்டமால் மாருந்துகள் தொடர்பான வழக்கில், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன இயக்குநர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
பாராசிடமால் உள்பட 127 மருந்துகளின் விலை குறைகிறது; நீரிழிவு மாத்திரை விலை உயர்வு
Updated On :1 ஜூன் 2023, 10:20 am

DIN

அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட தரம் குறைந்த பாராசிட்டமால் மாருந்துகள் தொடர்பான வழக்கில், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன இயக்குநர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் தரம் குறைந்த மாத்திரைகள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திலிருந்துதான் 2006ஆம் ஆண்டு வாக்கில் தமிழகம் முழுவதம் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தாம்பரம் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் சரக மருந்துகள் ஆய்வாளர், தரம் கறைந்த பாராசிட்டமால் மருந்து விநியோகம் செய்யப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணை நிறைவுபெற்றதையடுத்து, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்று பிறப்பித்த உத்தரவில் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன இயக்குநர்கள் மகேந்திரா பி ஜெயின் மற்றும் ராஜேஷ் பி ஜெயின் ஆகியோருக்கு தலா ஒராண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.