

பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.
மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் ஜூன் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக புஸ்ஸி ஆன்ந்த் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார்.
மேலும், உலக பட்டினி தினத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு ஒருவேளை மதிய உணவு வழங்கப்பட்டது.
தொகுதிவாரியாக அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.