ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு: தமிழிசை ஆலோசனை

புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு புகார் குறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

News image

தமிழிசை செளந்தரராஜன் (கோப்புப் படம்)

Updated On :12 ஜூன் 2023, 4:05 pm

DIN


புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு புகார் குறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டியில் ஊழல் நடந்துள்ளதாகவும், 5 கோடி ரூபாய் கைமாறியுள்ளதால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.