

சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பம் மீது 30 நாள்களில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த வெயில் செல்வி என்பவர் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை 30 நாளில் அதிகாரிகள் விசாரித்து உரிய உத்தவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்த கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தனர்.
முன்னதாக முறையான ஆவணங்கள் இல்லையென தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.