அமைச்சர்களின் துறையை மாற்ற முதல்வருக்கே அதிகாரம் உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே நிலப்பாறை திருமூலநகரில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வருகின்ற தண்ணீரை ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு மதகுகளை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திறந்துவைத்தார்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் விவசாயிகள் மீது தனி அக்கறை கொண்டவர். அதனால் தான் அணைகளின் நீர்நிலைகளை அறிந்து ஒவ்வொரு பகுதியிலும் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவைத்து வருகிறார். ராதாபுரம் பகுதி விவசாயிகளுக்காகன பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார் அதன் படி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த அரசியலைப்பு சட்டத்தின் படி தமிழ்நாடு முதல் அமைச்சர் தனது அமைச்சரவையில் தனக்கு வேண்டிய யார், யாருக்கு என்ன துறை வழங்கவேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு முதல்வருக்கு உள்ளது. அமைச்சர்களின் துறைகளை மாற்றும் அதிகாரம் முதல்வருக்கு மட்டும் தான் உள்ளது. அதன்படிதான் முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
ஆனால் தமிழக முதல்வர் அனுப்பிய ஆவணத்தை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இது வேதனையாக உள்ளது. இதனை ஆளுநர் தவித்திருக்கவேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலைய சரியில்லை. அவர் தொடர்பான வழக்கு நிலுவையில் தான் உள்ளது. வழக்கு நிலுவையில் இருக்கின்ற போது அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது.
தொடர்ந்து ஆளுநர் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். முதல்வரின் உரிமையில் தலையிடாமல் இருந்திருக்கலாம். இந்தியா மதசார்பற்ற நாடு. ஆனால் மதசார்புள்ள நாடு என வெளிப்படையாக ஆளுநர் குரல் கொடுப்பது நியாயமில்லை என்றார்.
இதையும் படிக்க: ஜூன் 20ல் அமெரிக்கா, எகிப்துக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, வடக்கன்குளம் உதவி பொறியாளர் ஜெயலெட்சுமி, திருமூலநகர் பங்கு தந்தை பாஸ்டின், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆவரைகுளம் பாஸ்கர், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சேவியர் செல்வராஜா, தி.மு.க ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.