11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

நாட்றம்பள்ளியில் மின்கம்பத்தை அகற்றாமல் மழைநீர் கால்வாய்: ஒப்பந்ததாரர் மீது புகார்

நாட்றம்பள்ளியில் மின்கம்பத்தை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

News image
Updated On :17 ஜூன் 2023, 12:39 pm IST

நாட்றம்பள்ளியில் மின்கம்பத்தை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எரிப்பகுதிலிருந்து சண்டியூர் வரையில் விடுபட்டு இருந்த புறவழிச் சாலைப் பணிகள், சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதற்காக மழைநீர் கால்வாயும் அமைக்கப்பட்டு வருகிறது.

Story image

இந்த நிலையில் மின் கம்பத்தோடு மழைநீர் கால்வாய் சேர்த்து கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கழிவுநீர் கால்வாயில் மின்கம்பம் கட்டுவதும் அதே நேரத்தில் மழைநீர் கால்வாயுடன் போர்வெல் அப்புறப்படுத்தாமல் கட்டுவது போன்ற சர்ச்சைக்குரிய விஷயம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நாட்றபள்ளியில் மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அத்துடன் சேர்த்து மழைநீர் கால்வாய் கட்டப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே இதுகுறித்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.