கழிவுநீர்த் தொட்டியை மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தக்கூடாது என்று நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
எந்தவொரு நிறுவனமோ அல்லது தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தக்கூடாது, மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்த அனுமதியில்லை.
அவ்வாறு மனிதர்கள் சுத்தப்படுத்தினால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை, ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அதுபோல, உரிமம் பெறாத லாரிகளை கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. விதிமுறைகளை மீறும் லாரிகளுக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாயும் 2-வது முறை ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் கழிவுநீரை திறந்த வெளி மற்றும் நீர்நிலைகளில் வெளியேற்றக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வெள்ளை மாளிகையில் இந்திய தேசியக்கொடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.