பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வத்திராயிருப்பு: கணவன் இறந்த துக்கத்தில் 2 மகள்கள், மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

வத்திராயிருப்பு அருகே கணவன் இறந்த துக்கத்தில்  இரு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

News image
Updated On :17 ஜூன் 2023, 11:03 am

DIN

வத்திராயிருப்பு அருகே கணவன் இறந்த துக்கத்தில்  இரு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு  அருகே கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(40). இவரது மனைவி பாண்டீஸ்வரி(35). இவர்களுக்கு வைத்தீஸ்வரி(16), காளீஸ்வரி(11) ஆகிய இரு மகள்களும், விக்னேஸ்வரன்(1) என்ற மகனும் உள்ளனர். 

ஈஸ்வரன் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். வைத்தீஸ்வரி 11- ம் வகுப்பும், காளீஸ்வரி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன், கடந்த 15-ம் தேதி சிகிச்சை பலனின்றி பலியானார்.

கணவர் பலியான துக்கத்தில் இருந்த பாண்டீஸ்வரி சனிக்கிழமை காலை தங்களது விவசாய கிணற்றில் 3 குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் பலியானவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.