தமிழகத்தில் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.
இன்று மாலை துல்ஹஜ் பிறை தென்பட்டதால் நாளை (ஜூன் 20) முதல் துல்ஹஜ் பிறை தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பெருநாளில் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு ஓட்டகை போன்றவற்றை குர்பானி கொடுத்து தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவார்கள்.