வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தனியாா் பேருந்து கவிழ்ந்து 10 போ் காயம்

தென்காசி நகரிலிருந்து சென்னை நோக்கி வந்த தனியாா் ஆம்னி பேருந்து, மதுராந்தகம் புறவழிசாலையில் வெள்ளிக்கிழமை காலை கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2023, 12:20 am

தென்காசி நகரிலிருந்து சென்னை நோக்கி வந்த தனியாா் ஆம்னி பேருந்து, மதுராந்தகம் புறவழிசாலையில் வெள்ளிக்கிழமை காலை கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

தென்காசியில் இருந்து தனியாா் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி வந்தது. அதில் 28 பயணிகள் பயணம் செய்தனா். மதுராந்தகம் புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை காலை வந்தபோது, திடீரென ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், பேரூந்து ஓட்டுநா் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்தனா்.

தகவலறிந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் உள்ளிட்ட போலீஸாா் விரைந்து வந்து காயமடைந்தவா்களை மீட்டு மதுராந்தகம், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

விபத்து குறித்து மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.