வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி கூடுதல் மனு

செந்தில் பாலாஜி கைது குறித்த ஆட்கொணர்வு மனுவில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

News image
Updated On :25 ஜூன் 2023, 11:50 am

DIN

செந்தில் பாலாஜி கைது குறித்த ஆட்கொணர்வு மனுவில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

இந்த நிலையில் கைது உத்தரவில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை முறையாக பிரிசீலிக்கவில்லை. 

மனுவை முறையாக பரிசீலிக்காம நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என பாஜக அண்ணாமலை பேசி வருகிறார். 2022 ஆகஸ்ட் முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு எதிராக பேசி வருகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.