நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2023, 6:41 am

DIN

கோவில்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலர் செல்லப்பா, மாவட்டச் செயலர் பேச்சிமுத்து, மாநிலத் துணைப் பொதுச் செயலர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும், விண்ணப்பம் முறையாக விசாரித்து தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷமிட்டனர்.

பின்னர், ஆர்ப்பாட்ட குழுவினர் கோட்டாட்சியர் (பொ) ஜெயாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில், மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி செயலர் பால்துரை, மாநிலக் கொள்கை பரப்புச் செயலர் முனியசாமி, தென்மண்டல மகளிர் அணி செயலர் சுப்புலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.