பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60!
தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வரையில் கிலோ ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, சென்னை போன்ற பெருநகரங்களில் திங்கள்கிழமை ரூ.90 முதல் ரூ.100-ஐ தொட்டது.
வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்த காரணத்தாலேயே விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, நாளொன்றுக்கு 60 லாரிகளில் தக்காளி வந்த நிலையில், இப்போது 42 லாரிகளில் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.
இதனிடையே, தக்காளி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலையில் தக்காளி விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | போலி கடவுச்சீட்டு: ஏடிஜிபி டேவிட்சன் மீதான புகாரை விசாரிக்க உத்தரவு!
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 62 பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கத்தைவிட 15 சதவீதம் தக்காளி கூடுதலாக கொள்முதல் செய்யப்படுவதாகவும், சில்லரை வியாபாரக் கடைகளில் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...