மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 226 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 126 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து புதன்கிழமை காலை 226 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | தக்காளி விலை உயா்வு தற்காலிகமானது- மத்திய அரசு விளக்கம்
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் புதன்கிமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93.32 அடியில் இருந்து 92.40 அடியாக சரிந்துள்ளது. நாளொன்றுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் ஒரு அடி வரை சரிந்து வருகிறது.
அணையின் நீர் இருப்பு 55.43 டி.எம்.சி ஆக உள்ளது.