ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு!

புதுச்சேரியில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூன் 2023, 7:46 am

DIN

புதுச்சேரியில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டார். 

புதுச்சேரியை அடுத்துள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் அறங்காவல் குழு தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். 

கோவில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த இரண்டு நாள்களாக கணபதி ஹோமம், அனுக்ஞை ஹோமம் நடத்தப்பட்டு முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, 
4-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Story image

கோயில் கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள்  பூஜைகளுடன் புனித நீர் ஊற்றி நன்னீராட்டு செய்தனர். தொடர்ந்து மூலவருக்கு முதல்வர் ரங்கசாமி புனித நீர் ஊற்றி, தீபாராதனை காட்டி சிவபெருமானுக்கு பூஜை செய்தார்.

இவ்விழாவில் புதுச்சேரி, வானூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோயிலில் அன்னதானத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். கோவில் கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.