மாசி மகம் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 7 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற மார்ச் 7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாசி மகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அன்றைய தினம் (மார்ச் 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்: டிடிவி தினகரன்