தொழில்நுட்பக் கோளாறு: சென்ட்ரல் - விமான நிலையம் வரையிலான மெட்ரோ சேவை நிறுத்தம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ


சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாள் ஒன்று 2 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்த மார்க்கமாக பயணிக்கும் பயணிகள் ஆலந்தூர் மார்க்கமார பயணிக்குமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகளில் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com