நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழக மக்கள் ஒன்றுபட்டு சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image

இரா.முத்தரசன்

Updated On :5 மார்ச் 2023, 10:19 pm

DIN

தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நாட்டின் பல மாநிலங்களிலிருந்து புலம் பெயா்ந்து வந்த தொழிலாளா்கள் தமிழகத்தில் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அமைதியை விரும்பாத, வெறுப்பு அரசியலை பரப்புரை செய்து, மோதல்களை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும், மலிவான செயல்களில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிா்’, ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான மரபை காத்து நிற்பதில், தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நின்று, சமூக விரோத, சீா்குலைவு

சக்திகளை முறியடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.