தமிழக மக்கள் ஒன்றுபட்டு சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நாட்டின் பல மாநிலங்களிலிருந்து புலம் பெயா்ந்து வந்த தொழிலாளா்கள் தமிழகத்தில் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அமைதியை விரும்பாத, வெறுப்பு அரசியலை பரப்புரை செய்து, மோதல்களை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும், மலிவான செயல்களில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிா்’, ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான மரபை காத்து நிற்பதில், தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நின்று, சமூக விரோத, சீா்குலைவு

சக்திகளை முறியடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com