சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 போ், நிரந்தர நீதிபதிகளாக இன்று(திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர். 
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 போ், நிரந்தர நீதிபதிகளாக இன்று(திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர். 

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை, தில்லி, அலகாபாத் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. 

அதன்படி, சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவா்த்தி, ஆா்.விஜயகுமாா், முகமது சஃபீக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்வு பெற்றுள்ளனர்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக இன்று(திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள், தங்களது 2 ஆண்டு பதவிக்காலத்துக்கு பிறகு நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்த்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com