சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

ஒலி மாசுவை தடுக்க ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடுவது சோதனை முயற்சியாக நிறுத்தப்பட்டது.

ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடுவது நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஒலிபெருக்கி மூலமே அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிடுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஒலிபெருக்கி அறிவிப்பு முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக, புறநகர் ரயில் நிலையத்தில் ரயில் புறப்பாடு உள்ளிட்ட தகவல்கள் குறித்த அறிவிப்புகள் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும் என்றும், மத்திய ரயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கி அறிவிப்பு அகற்றப்பட்டது சோதனை முயற்சிதான் என்றும் இனி விளம்பரம் தொடர்பான ஆடியோக்களும் ஒலிபரப்பப்படாது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதனால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com