சென்னை: தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை இனத்தைச் சேர்ந்த 4 குரங்குகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு மீட்டனர்.
குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து வந்த ஒரு பயணியை அதிகாரிகள் வழிமறித்து சோதனையிட்டதில் இந்த அரிய வகை குரங்குகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர் என்று அதன் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வனவிலங்கு குற்றத்தடுப்பு பணியகத்தின் வனவிலங்கு ஆய்வாளரால் சான்றளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது