'பெண்கள் தொடாத துறையே இல்லை; வெல்லாத செயலே இல்லை' - கமல்ஹாசன் வாழ்த்து

பெண்கள் தொடாத துறையே இல்லை, தொட்டதில் வெல்லாத செயலே இல்லை என கமல்ஹாசன், மகளிர் நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பெண்கள் தொடாத துறையே இல்லை, தொட்டதில் வெல்லாத செயலே இல்லை என கமல்ஹாசன், மகளிர் நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று மகளிர் நாளையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பெண்களுக்கு இந்நாளில் வாழ்த்து கூறியுள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பதிவில், 'பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து'' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com