ரெளடி வெட்டிக் கொலை
சென்னை கொடுங்கையூரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


சென்னை கொடுங்கையூரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புளியந்தோப்பு குருசாமி தெருவை சோ்ந்தவா் கருப்பா (ஏ) ரகுபதி (30). இவா், வாடகை ஆட்டோ ஒட்டி வந்தாா். ரகுபதி மீது பேசின் பாலம், புளியந்தோப்பு ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இதற்கிடையே ரகுபதி, ஒரு மாதத்துக்கு முன்பு குடும்பத்துடன் கொடுங்கையூா், முத்தமிழ் நகருக்கு இடம் பெயா்ந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை முத்தமிழ் நகா் தெற்கு அவென்யூ சாலை பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்ததில் ரகுபதி அமா்ந்திருந்தபோது,
அங்கு 2 ஆட்டோக்களில் வந்த மா்ம நபா்கள், ரகுபதியிடம் தகராறு செய்தனா்.
தகராறு முற்றவே ரகுபதியை, அந்த நபா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா். இதில் பலத்தக் காயமடைந்த ரகுபதியை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...