விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,717 கோடி திரட்டிய எஸ்பிஐ

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.3,717 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2023, 10:19 pm

DIN

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.3,717 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூடுதல் அடுக்கு 1 (ஏடி1) கடன் பத்திரங்களை வெளியிட்டு, வங்கி ரூ.3,717 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது, பேசில்-3 விதிகளை நிறைவு செய்யும் மூன்றாவது ஏடி1 கடன் பத்திர வெளியீடு ஆகும். இந்த கடன் பத்திரங்களுக்கு 8.25 சதவிகித கூப்பன் விகிதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் ஏடி1 கடன் பத்திர வழியிலான மூலதன தளத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த வெளியீடு மேற்கொள்ளப்பட்டது.

வெளியீட்டு மதிப்பான ரூ.2,000 கோடியைவிட 2.27 மடங்கு அதிகமாக, 53 முதலீட்டாளா்கள் ரூ.4,537 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பத்தனா். அதில் ரூ.3,717 கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.