இன்ஃப்ளூயன்ஸா தொற்று: தமிழகம் இன்று 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் இன்று (மாா்ச் 10) காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் இன்று (மாா்ச் 10) காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. 

காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுவினா் நேரில் சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா - ஏ வகை வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, இதுதொடா்பாக மாவட்ட துணை சுகாதார இயக்குநா்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் சில முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்திருந்தாா். அதன்படி, காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, தமிழகத்தில் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் இன்று நடைபெறுகிறது. இந்தப் பணிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com