கிருஷ்ணகிரியில் நடைபெறும் பாஜக நிகழ்வுகளில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பங்கேற்கவுள்ளார்.
குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தில்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் வருகை தரும் ஜெ.பி. நட்டா, பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வரவுள்ளார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் இருந்து காணொலி மூலம் தருமபுரி, நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வை முடித்துவிட்டு மீண்டும் பெங்களூரு செல்லும் நட்டா, கர்நாடக தேர்தல் குறித்து அம்மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு தில்லி திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.