ஈரோடு பேருந்து, ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

ஈரோடு பேருந்து, ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஈரோடு பேருந்து, ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து வெடிகுண்டு சோதனை கருவிகள் மற்றும் மோப்ப நாயுடன் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஈரோடு காவல் துறையினர் சந்தோஷ் குமார் என்பவரை திருப்பூரில் மாவட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சந்தோஷ் குமார் ஏற்கனவே இதேபோல் மிரட்டல் விடுத்த வழக்குகளில் 2 முறைக்கு மேல் சிறைக்கு சென்றவர் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com