கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி: அமைச்சர்

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். 
ஐ. பெரியசாமி (கோப்புப் படம்)
ஐ. பெரியசாமி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read


தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று மக்களுக்கு பல நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பேருந்துகளும், கிராமப்புறங்களை நகரத்துடன் இணைக்க சாலைகளை மேம்படுத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதான சாலைகளிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com