சென்னையை அழகுபடுத்த ரூ.1.64 கோடி: மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பாலங்களை அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பாலங்களை அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் 5 பாலங்களின் கீழ்ப்பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.
ராயபுரம் மண்டலம், வார்டு-61க்குட்பட்ட பாந்தியன் சாலை மற்றும் காசா மேஜர் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-110 மற்றும் 113க்குட்பட்ட வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...