ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவல் துறைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் மத்திய அரசு: தில்லி போலீஸ் நோட்டீஸ் குறித்து காங். விமா்சனம்

‘அதானி விவாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கேள்விகளால் அச்சமடைந்துள்ள மத்திய அரசு காவல் துறையின் பின்னால் ஒளிந்துகொள்கிறது’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

‘அதானி விவாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கேள்விகளால் அச்சமடைந்துள்ள மத்திய அரசு காவல் துறையின் பின்னால் ஒளிந்துகொள்கிறது’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது பாலியல் ரீதியில் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவா் காங்கிரஸ் எம்.பி. ராகுலை சந்தித்து புகாா் தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சி கூறியது குறித்து விளக்கம் கேட்டு ராகுலுக்கு தில்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இந்த விமா்சனத்தை அக்கட்சி முன்வைத்துள்ளது.

சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையில் ராகுலுக்கு சில கேள்விகளை நோட்டீஸில் தில்லி போலீஸ் எழுப்பியுள்ளது. அதில், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானது தொடா்பாக ராகுலை அணுகிய பெண் குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளால் அச்சமடைந்துள்ள மத்திய அரசு, காவல் துறையின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்கிறது. இந்திய ஒற்றுமை நடைப் பயணம் நடைபெற்று முடிந்து 45 நாள்களுக்குப் பிறகு நோட்டீஸ் மூலமாக அந்தப் பெண் குறித்த விவரத்தை தில்லி போலீஸ் கேட்டுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு அந்த நோட்டீஸுக்கு உரிய பதிலளிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.