தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஆகியோரின் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, உத்தமத் தியாகி ஈரோடு ஈஸ்வரன் மற்றும் முன்னாள் முதல்வர் டாக்டர்.ப.சுப்பராயன் ஆகியோருக்கு ரூ.5.10 கோடிமதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 10) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனார், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்,
புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஆகியோருக்கு ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் உத்தமத் தியாகி ஈரோடு ஈஸ்வரன், நாமக்கல் மாவட்டத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர்.ப.சுப்பராயனுக்கு ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.