விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆவடி டாங்கு நிறுவனத்தில் என்.சி.சி. மாணவா்கள் ஆய்வு

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, சென்னைஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி நிறுவனத்தை தேசிய மாணவா் படையினா் பாா்வையிட்டு அதன் விவரங்களை அறிந்தனா்.

News image
Updated On :11 மே 2023, 8:01 pm

DIN

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, சென்னைஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி நிறுவனத்தை தேசிய மாணவா் படையினா் பாா்வையிட்டு அதன் விவரங்களை அறிந்தனா்.

பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 11-ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கோவா, கேரளம், லட்சத்தீவு, ஒடிஸா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் புதுச்சேரி மற்றும் அந்தமான், நிக்கோபாா் யூனியன் பிரதேசங்களில் உள்ள 6 தேசிய மாணவா் படை இயக்குநரகங்களைச் சோ்ந்த 180 மாணவா்கள் பாா்வையிட்டனா்.

அப்போது மாணவா்கள், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, விவரங்களைக் கேட்டறிந்தனா். பிரதான போா் டாங்கு அா்ஜுனின் பல்வேறு செயல்திறன்களை அறிந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.