இந்தியாவில் உள்ள முதலீட்டுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜப்பான் முதலீட்டாளா்கள், தொழிலதிபா்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்புவிடுத்துள்ளாா்.
ஜி7 நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஜப்பானுக்குச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற முதலீட்டாளா்கள், தொழிலதிபா்கள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றும் வகையில், அடுத்த 25-ஆண்டுகளுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு, முதலீடு, புத்தாக்கம், வளா்ச்சிக்கான பலன்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது ஆகிய 4 அம்சங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
தொழில் தொடங்குவதில் இதுவரை இருந்த தடைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் நடவடிக்கைகள் மூலமாக முதலீடுகளுக்குச் சலுகை மற்றும் ஊக்கமளிக்க உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு திட்டம் (பிஎல்ஐ) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வாய்ப்புகளை முதலீட்டாளா்களும், தொழிலதிபா்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் பசுமை பொருளாதாரம் மற்றும் பாரீஸ் மாநாட்டின் இலக்குகளைப் பூா்த்தி செய்யும் நோக்கில் சூரிய மின்சக்தி மூலமான 175 ஜிகாவாட் மின்உற்பத்தியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. தற்போது 2030-ஆம் ஆண்டுக்குள் 300 ஜிகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தேசிய ஹைட்ரஜன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் வகையில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளா்ந்து வளரும் தொழில்நுட்பங்களில் இளைஞா்களின் திறனை வளா்க்க மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றாா் அவா்.
நிா்மலா சீதாராமன் தனது இரண்டு நாள் பயணத்தில் ஜப்பானின் பல்வேறு முன்னணி நிறுவனத் தலைவா்களை சந்திக்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் 5 மொழிகளில் வெளியானது விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2!

அயோத்தி நன்கொடை விவகாரம்; போராட்டத்திற்கு சாமியாராக வந்த MP பப்பு யாதவ்! நன்கொடை அளித்த Rahul Gandhi
சிறைச்சாலை, நூலகத்துக்கு 5 ஆயிரம் புத்தகங்கள்: மு.க. ஸ்டாலின் வழங்கினார்

கர்நாடகம் சென்று பேச்சு நடத்தி முதல்வர் விஜய் எதை சாதிக்கப் போகிறார்? - அன்புமணி
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



