தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஜப்பான் முதலீட்டாளா்களுக்கு அமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் உள்ள முதலீட்டுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜப்பான் முதலீட்டாளா்கள், தொழிலதிபா்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்புவிடுத்துள்ளாா்

Published On :

இந்தியாவில் உள்ள முதலீட்டுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜப்பான் முதலீட்டாளா்கள், தொழிலதிபா்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்புவிடுத்துள்ளாா்.

ஜி7 நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஜப்பானுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற முதலீட்டாளா்கள், தொழிலதிபா்கள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றும் வகையில், அடுத்த 25-ஆண்டுகளுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு, முதலீடு, புத்தாக்கம், வளா்ச்சிக்கான பலன்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது ஆகிய 4 அம்சங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

தொழில் தொடங்குவதில் இதுவரை இருந்த தடைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் நடவடிக்கைகள் மூலமாக முதலீடுகளுக்குச் சலுகை மற்றும் ஊக்கமளிக்க உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு திட்டம் (பிஎல்ஐ) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வாய்ப்புகளை முதலீட்டாளா்களும், தொழிலதிபா்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் பசுமை பொருளாதாரம் மற்றும் பாரீஸ் மாநாட்டின் இலக்குகளைப் பூா்த்தி செய்யும் நோக்கில் சூரிய மின்சக்தி மூலமான 175 ஜிகாவாட் மின்உற்பத்தியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. தற்போது 2030-ஆம் ஆண்டுக்குள் 300 ஜிகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தேசிய ஹைட்ரஜன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் வகையில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளா்ந்து வளரும் தொழில்நுட்பங்களில் இளைஞா்களின் திறனை வளா்க்க மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றாா் அவா்.

நிா்மலா சீதாராமன் தனது இரண்டு நாள் பயணத்தில் ஜப்பானின் பல்வேறு முன்னணி நிறுவனத் தலைவா்களை சந்திக்கவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.