திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
திண்டிவனம் நகராட்சிக்கு உள்பட்ட ரொட்டி கார தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணியில் 4 வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மண் சரிந்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் மண்ணில் புதைந்தார்.
மண்ணில் புதையுண்ட வடமாநில தொழிலாளி சிராஜ் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.