மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி!

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated On :15 மே 2023, 9:30 am

DIN

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.10 லட்சமும், கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.