டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கள்ளச்சாராய விற்பனை: தமிழ்நாடு முழுவதும் 3,762 பேர் கைது

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
கோப்புப் படம்
Updated On :17 மே 2023, 1:03 pm

DIN

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் காவல் துறை தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறது.

கடந்த 13ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட இந்த சோதனையில், இரண்டு நாள்களில் மட்டும் 1,558 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கள்ளச்சாராய சோதனையில் தற்போதுவரை தமிழ்நாடு முழுவதும் 3,762 கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 94,560 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.