ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாகையில் விசைப்படகுகளை ஆய்வு செய்யும் மீன்வளத்துறையினர்

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குச் சட்டத்தின் படி, மீன்வளத் துறையினர் 11 குழுக்களாகப்பிரிந்து  545 விசைப் படகுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

News image
Updated On :19 மே 2023, 6:14 am

DIN

நாகை: நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குச் சட்டத்தின் படி, மீன்வளத் துறையினர் 11 குழுக்களாகப்பிரிந்து  545 விசைப் படகுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குச் சட்டத்தின் படி நாகை மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து விசைப்படகுகளும் இன்று ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, துணை இயக்குநர் பவானிசாகர், தர்மபுரி உதவி இயக்குநர் கோகுலகிருஷ்ணன் ஆகியோரது தலைமையில் நாகை, திருவாரூர், தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீன்வளத் துறையினர் 11 குழுக்களாக  நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு குழுக்களில் இரண்டு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

Story image

இந்த 11 குழுக்களும் நாகூர், நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை, வேதாரண்யம், ஆற்காட்டுத் துறை பகுதிகளில் உள்ள மீனவர்களின் 545 விசைப்படகுகளை நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Story image

ஆய்வில் படகு உரிமையாளர்கள், படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீட்டு உரிமம் மற்றும் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம் ஆகியவற்றையும் மீன்வளத்துறை குழுக்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைதொடர்பு கருவிகள், பாதுகாப்பு கருவிகளையும் மீன்வளத்துறையினர் ஆய்வு செய்கின்றனர். 

Story image

ஆய்வில் காண்பிக்கப்படாத விசைப்படகுகள், மற்றும் பதிவு சான்று  ரத்து செய்யப்பட்ட படகுகளின் விவரம் ஆய்வின் இறுதியில் தெரியவரும்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.