பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

தஞ்சாவூர் சோழபுரத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.

News image
Updated On :27 மே 2023, 8:26 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சோழபுரத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிழந்தார். 

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரத்தில் மின்வாரிய ஊழியராக வேலை செய்து வருபவர் மணிகண்டன். இவர் அய்யாநல்லூரில் உள்ள டிரான்ஸ்பார்மரை பழுது பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார்.

ட்ரான்ஸ்ஃபார்மர் சரியாக நிறுத்தாததால் ஒரு கம்பியில் இருந்து மட்டும் மின்சாரம் வந்து கொண்டிருந்துள்ளது. இதனை கவனிக்காத மணிகண்டன் டிரான்ஸ்பார்மரின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.