சென்னையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின.
தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
போக்குவரத்து துறை, தனியார்மயமாதலைக் கண்டித்து போக்குவரத்துத் துறை ஊழியர்கள் இன்று (மே 29) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்த அனைத்து மாநகரப் பேருந்துகளையும் இயக்காமல் பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நடைபெற்ற இந்த போராட்டத்தால், பொதுமக்களில் பலர் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், தொழிற்சங்க ஊழியர்களுடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதன் பின்னர், சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலிருந்தும் பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே பண்ணை நிலத்தில் தீ
சிலிண்டா் வெடித்து விபத்து! பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு
ஆம்புலன்ஸ் ஓட்டுநா்,உதவியாளா் மீது தாக்குதல். 7 போ் கைது

பேருந்து நிழற்குடையில் கட்சித் தலைவா் பெயா்: எதிா்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினா் திரண்டதால் பதற்றம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


