நவ.15-க்குள் பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 
நவ.15-க்குள் பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் 15.11.2023 க்குள் பயிர்க் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி.அபூர்வா, இ.ஆ.ப. வேளாண்மைத் துறை ஆணையர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., வேளாண்மை கூடுதல் இயக்குநர்  ஸ்ரேயாபி.சிங்., இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (வே. பொ.) ஆர். முருகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி டெல்டா விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்கான ஆலோசனைகள் கீழ்குறிப்பிட்டவாறு வழங்கப்படுகிறது . 

நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பு மழைப்பொழிவு பெறப்படின், குறுகிய கால நெற்பயிர் ரகங்களான ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51. அம்பை 16 போன்ற ரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால், குறுகிய காலப் பயிர்களான பயறுவ கைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழிப் பின் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.

தற்போது, நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் வறட்சியைத் தாங்கும் தன்மையை ஏற்படுத்தும். பிங்க் பிக்மெண்ட்டட்ஃ பேக்கல்டேடிவ் மெத்தைலோ ட்ரோஃப் என்ற உயிரினக் காரணியை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற வீதத்தில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும், 

நிலத்தடி நீரை (கிணறுகள், உறைக் கிணறுகள், ஆழ்துளை குழாய்க் கிணறுகள்) தேவைக்கேற்றவாறு, சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்திட வேண்டும்.

சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் 15.11.2023-க்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com