தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக் கிழமை(நவ.5) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு வசதியாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.