பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமியை விசாரிக்க லோக் ஆயுக்தவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமியை விசாரிக்க லோக் ஆயுக்தவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க- கோவை கார் குண்டுவெடிப்பு: 14 ஆவது நபர் கைது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். 2022 பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.