தொடர்ந்து பேசியவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. சென்னையை சுற்றிய ஏரிகளை சுத்தப்படுத்தி மழைநீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்றுவதற்கு மோட்டார் பம்புகள், மரம் விழுந்தால் அகற்றுவதற்கு பணியாளர்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் மட்டும் 2000 பேர் உள்ளனர். மேலும், சென்னையில் நடைபெற்று வரும் சாலை பணிகள் மழையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது என கே. என். நேரு தெரிவித்தார்.