அரைகுறை ஆடையுடன் ஆடுவதுதான் ஹேப்பி சண்டேவா?: நடிகர் ரஞ்சித் கடும் விமர்சனம்

அரைகுறை ஆடையுடன் ஆடுவதுதான் ஹேப்பி சண்டேவா? என நடிகர் ரஞ்சித் விமர்சனம் செய்துள்ளார்.
அரைகுறை ஆடையுடன் ஆடுவதுதான் ஹேப்பி சண்டேவா?: நடிகர் ரஞ்சித் கடும் விமர்சனம்

அரைகுறை ஆடையுடன் ஆடுவதுதான் ஹேப்பி சண்டேவா? என நடிகர் ரஞ்சித் விமர்சனம் செய்துள்ளார்.

கோவை சவுரிபாளையத்தில் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை ஆடி அசத்தினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரைப்பட நடிகர் ரஞ்சித்: நான் பிறந்த மண்ணில் நிற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நமது கலாச்சாரமான வள்ளி கும்மியாட்டம், கோலாட்டம், குச்சி ஆட்டம் அது போன்ற கலைகள் நம் மண்ணில் பரவிருந்த நிலையில் தற்போது மண்ணோட மண்ணாக போய்விட்டது. 

நான் ஒரு திரைப்பட கலைஞராக சொல்றேன், இன்றைக்கு இருக்க காலகட்டத்தில் சினிமா பட நடிகர்கள் துணிக்கடை திறப்பு விழாவிற்கு கூட 5 லட்சம் முதல் 7 லட்சம் பணம் வாங்கி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அந்த காலத்தில் வயக்காட்டில் குழந்தையைத் தொட்டில் போடும்போது வேலை செய்யும் போதும் கும்மி பாடி ஆனந்தமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போனை பயன்படுத்தி செல்போனை தான் காதலிக்கிறோம், தவிர மனிதர்களை யாரும் காதலிக்கவில்லை. இந்த வள்ளி கும்மியாட்டத்தில் மருமகள், மாமியார், பேரன், பேத்தி ஆகியோர் ஒன்றிணைந்த ஆடும் ஒரு ஆட்டம் ஆகும். 

ஆனால்,‘ஹேப்பி ஸ்ட்ரீட்’,‘ஹேப்பி சண்டே’ என்கிற பெயரில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் ஆடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. எனக்கு அரசு அதிகாரி என்ற ஒரு அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவேன். இது போன்ற கலாச்சாரம் அடுத்த பேரழிவு நோக்கி எடுத்துச் செல்லும் எனவும் முதலில் மொபைல் போன் பேசுவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பதற்காக மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். ஹேப்பி சண்டே, ஹேப்பி ஸ்ட்ரீட் ஒரு தாய்லாந்து, சிங்கப்பூர் போல கலாச்சாரத்தை நாம் வளர விடக்கூடாது வளர விடமாட்டோம் என நம்புகிறேன் என்று கூறினார். 

ஹேப்பி சண்டே, ஹேப்பி சண்டே ஊக்குவிப்பதை விட இதுபோல பாரம்பரிய கலாச்சாரமான வள்ளி கும்மி ஆட்டத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுமக்களின் மன அழுத்தம் குறையவும், வாரத்தின் முதல் நாளை புத்துணா்வுடன் தொடங்கவும் சென்னை போன்ற பெருநகரங்களில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com