புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை:  நீர்மட்டம் உயர்வு!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் உயர்ந்தது. 

News image
Updated On :7 நவம்பர் 2023, 4:57 am

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் உயர்ந்தது. 

முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பெரியாறு அணையில் 35.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 46.8 மி.மீ., மழையும் பெய்தது. அதன் காரணமாக அணைக்குள் விநாடிக்கு 2,605 கன அடி தண்ணீர் வந்தது. திங்கள்கிழமை கிழமை அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீர்மட்டம் 126.85 அடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 105 கன அடியாக இருந்தது.

அணை நிலவரம்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.85 அடி (மொத்த உயரம் 153 அடி), நீர் இருப்பு 4,017 மில்லியன் கன அடி. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 3,605 கன அடியும்,  நீர் வெளியேற்றம் விநாடிக்கு 105 கன அடியாகவும் இருந்தது.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

பெரியாறு அணையில் 35.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 46.8 மி.மீ., மழையும் பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.