தமிழ்நாடு
பால் உற்பத்தி குறைந்து வருகிறது: அமைச்சர்
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி தொடர்ச்சியாக குறைந்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி தொடர்ச்சியாக குறைந்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு கடன் வழங்கி பால் பண்ணை தொடங்க அறிவுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்தால் நிச்சயம் பால் கொள்முதல் அளவும் அதிகரிக்கும் என உறுதியளித்த அமைச்சர், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆவின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்படும் என சுட்டிக்காட்டினார்.