அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்தல்: வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளில் திமுக கொடி காட்டிய காரில், ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ போதைப்பொருள்களை கடத்திய வந்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News image

ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ போதைப்பொருள்களை கடத்திய வந்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Updated On :10 நவம்பர் 2023, 0:26 pm IST


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளில் திமுக கொடி கட்டிய காரில், ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ போதைப்பொருள்களை கடத்திய வந்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளுக்கு, ஹான்ஸ், பான்மாசலா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனைக்காக கொண்டு வருவதாக நடுக்காவோி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மனத்திடல் பகுதியில் வாகன சோதனையின் போது திமுக கொடி கட்டிய ஃபார்ச்சூனர் கார் ஒன்று‌ வந்துள்ளது. போலீசார் காரை சோதனை செய்வதற்காக நிறுத்தியுள்ளனர். ஆனால் காரில் இருந்த இருவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் சந்தகேமடைந்த போலீசார், காரை சோதனை செய்தனர். அப்போது, கார் சீட்டின் அடியில் சுமார் 700 கிலோ ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜின்பூர் தாலுகா வஸ்னாராம் (28), சிம்பா ராம் (25) என்பது தெரியவந்து. 

மேலும், இவர்கள் எந்த மாநிலத்திற்கு ஹான்ஸ் எடுத்துச் சென்றாலும், அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியின் கொடியை பயன்படுத்தி விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த கார் மன்னார்குடியை சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகரின் கார் என்பதும், அது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.