உதகை மலை ரயில் சேவை நவ. 18 வரை ரத்து!

கோவை மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை வரும் 18ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கோவை மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை வரும் 18ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

மண்சரிவால் ரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கப்படாததால் 18ஆம் தேதி வரை ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில், மலை ரயில் பாதையில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. 

மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி,  ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் தொடர் பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதன் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 18ஆம் தேதி வரை உதகை மலை ரயில் சேவை நிறுத்திவைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com